NiFty Television

Neat, Informative, Feasible, Timely, Yours

Sunday, August 15, 2021

பொதிகை இரவு 7.00 மணி செய்திகள் [15.08.2021]

1) நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர் நரேந்திர மோதி. 2) அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கூற்றின்படி, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். - செங்கோட்டையில் பிரதமர் உரை. ** கட்டமைப்பை மேம்படுத்த, நூறு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், திட்டம் அறிவிப்பு. 3) சுதந்திர தினத்தையொட்டி, தில்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை. 4) சென்னை கோட்டை கொத்தளத்தில், முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றினார், முதலமைச்சர் மு க ஸ்டாலின். ** தியாகிகளின் ஓய்வூதியம் 18 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என அறிவிப்பு. 5) ஆப்கானிஸ்தான் அரசு., அதிகாரத்தை தாலிபன்களிடம் ஒப்படைக்கிறது.- இடைக்காலத் தலைவராக, தாலிபன் தலைவர் அலி அஹமது ஜலாலி நியமனம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.